அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பிக்குகள் புடைசூழ பதவியேற்றார் பந்துலசேன

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் சமன் பந்துலசேன நேற்று பதவியேற்றார். பௌத்த துறவிகள் புடைசூழ யாழ்ப்பாணம் கைதடி யிலுள்ள வட மாகாண சபை வளாகத்துக்கு நேற்று அழைத்து வரப்படட அவர், 11. 40 சுபநேரத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 

98 வீதம் தமிழ் மக்களைக் கொண்ட மாகாணத்தில் தமிழ் தெரியாத ஒருவரை நிர்வாக தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்க வேண்டாம் என தமிழ்த் தரப்புகள் அழுத்தமாகத் தொடர் கோரிக்கை விடுத்த போதும் அவை எதனையும் கண்டுகொள்ளாமல் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. பதவியேற்பு வைபவத்தில் மத ஆசி வழங்குவதற்காக 5 க்கும் மேற்பட்ட பௌத்த மத துறவிகள் அழைத்து வரப்பட்டனர். எனினும் சம்பிரதாயத்திற்காக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்களும் தலா ஒருவர் அழைக்கப்பட்டிருந்தனர்.



யாழில் பிக்குகள் புடைசூழ பதவியேற்றார் பந்துலசேன Reviewed by Author on July 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.