மன்னார் நானாட்டானினை சேர்ந்தவரின் மகன் தமிழ்நாட்டில் கின்னஸ் உலக சாதனை-
மன்னார் நானாட்டானினை சேர்ந்தவரின் மகன் தமிழ்நாட்டில் கின்னஸ் உலக சாதனை
மன்னார் நானாட்டான் பிரதேசசெயலகத்தின் மோட்டைக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு என்னும் கிராமத்தினை சேர்ந்த திரு.சின்னையா, கண்ணம்மா என்பவரின் மகன் திரு.சி.ரஞ்சன் (என்ற ஈசன்) ஜெயலெட்சுமி தம்பதிகளின் மகன் செல்வன் ரஞ்சன் திவ்வியேஷ் (வயது 16) டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் உக்ரைன் நாட்டினை சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து நிலைநாட்டியிருந்த கின்னஸ் சாதனையை இந்த மாணவன் முறியடித்துள்ளார்.
இம்மாணவனின் தந்தை கடந்த 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் நானாட்டானிலிருந்து அவரின் தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினருடன் தமிழகம் சென்று கும்மிடிப்பூண்டி என்னும் இடத்திலுள்ள அகதிமுகாமில் வசித்து வருகின்றார். அப்படியிருந்தபோதும் தனது மகனின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி இச்சாதனையினை நிகழ்த்த பாடுபட்டுள்ளார்.
இச்சாதனையினை படைத்த மாணவன் திவ்வியேஷ் அவருக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் பயிற்சி வழங்கிய சந்தியா அவர்களையும் நானாட்டான் புதுக்குடியிருப்பினை சேர்ந்த மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். அவர் கல்வியிலும் உயர்வுபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
No comments:
Post a Comment