நல்லூர் உற்சவத்துக்குச் செல்ல தடுப்பூசி அட்டை அவசியம்
சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களின் நன்மை கருதியும் ஆலய உற்சவம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம்முறையும் வீதித்தடைகள் இன்று நள்ளிரவு முதல் 08.09.2021 இரவு வரை முழுமையாகப் போடப்படும்.
வழமை போல் மாற்றுப்பாதை அமுலில் இருக்கும்.
அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி,அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
நல்லூர் உற்சவத்துக்குச் செல்ல தடுப்பூசி அட்டை அவசியம்
Reviewed by Author
on
August 11, 2021
Rating:
No comments:
Post a Comment