அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மேலும் ஒரு வயோதிபர் கொரோனா தொற்றால் மரணம்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அவர் இன்று (17) மாலை மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, -மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மன்னார் மூர்வீதி பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்த வயோதிபர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக உயிரிழந்த 3 வயோதிபர்களும் எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இந்த மாதம் தற்போது வரை 246 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் 1270 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இது வரை 1287 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் மேலும் ஒரு வயோதிபர் கொரோனா தொற்றால் மரணம். Reviewed by Author on August 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.