மன்னாரில் 18 நாட்களில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மாவட்டத்தில் இது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த வருடம் 1324 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 1341 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.எனவே பொதுமக்கள் விழிப்புடன் சுகாதார நடை முறைகளை பின் பற்றிக்கொள்ள வேண்டும்.
குணம் குறிகள் எதுவும் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்களை பரிசோதித்து கொள்வதற்கான வசதிகள் மன்னார் வைத்திய சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்றாளர்கள் போதுமான அளவு இடவசதி உள்ள காரணத்தினால் வீடுகளில் தங்க வைத்து சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமையினால் மக்கள் தமக்கு எதுவும் குணம் குறிகள் காணப்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி சுகாதார வைத்திய அதிகாரி அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையினையோ நாட முடியும்.
தற்போதைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எவ்வித ஒன்றுகூடலையும் நடத்த முடியாது என்பதால் மக்கள் ஒன்று கூடலினை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பொலிஸார் அல்லது சுகாதார துறையினருக்கு தெரியாமல் இரகசியாமாக ஒன்று கூடுவதையும், நிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பு ஊசியை இது வரை பெற்றுக் கொள்ளாதவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (20) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனை யில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 ஆவது தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் 18 நாட்களில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Reviewed by Author
on
August 19, 2021
Rating:
No comments:
Post a Comment