அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு முதலாவது தடுப்பூசி மீண்டும் வழங்கப்படவுள்ளது

மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு வருகிற 07.08.2021 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் கொவிட் 19 ற்கு எதிரான முதலாவது தடுப்பூசி Pfizer மீண்டும் கட்டையடம்பன் பாடசாலையில் வழங்கப்படவுள்ளது. 

 இது கடந்த நாட்களில் இவ்வாய்ப்பினை தவறவிட்டவர்களுக்கு என்பதை அறியத்தருகின்றோம்

 *கவனத்திற்கு* 

* 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்ட அனைவரும் இத்தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ள முடியும். 

* குறிப்பிட்ட அளவிலான மருந்துகளே கையிருப்பிலுள்ளமையினால் முந்துவோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் 

 * தேசிய அடையாள அட்டையில் பிற மாவட்ட முகவரியையுடைய மன்னார் மாவட்டத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள் தங்களுடைய வதிவிடத்தினை கிராம சேவகருடைய உறுதிப்படுத்தலை தொடர்ந்து பிரதேச செயலரின் உறுதிப்படுத்தலுடன் இதனைப்பெற்றுக்கொள்ளலாம். 

* எச்சந்தர்ப்பத்திலும் 30 வயதிற்கு குறைந்தவர்கள்,பிற மாவட்டத்தைச்சேர்ந்தவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். 

 * இத்தடுப்பூசி நிலையங்களிற்கு முதுமை,கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள், அங்கவீனம் காரணமாக வருகை தர முடியாதவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும். 

இதுவே இறுதி சந்தர்ப்பம் என்பதால் தயவு செய்து தாமதிக்காமல் தகுதியுள்ள அனைவரும் விரைந்து இத்தடுபுபூசியினை பெற்றுக்கொண்டு உங்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும்.


மன்னார் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு முதலாவது தடுப்பூசி மீண்டும் வழங்கப்படவுள்ளது Reviewed by Author on August 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.