அண்மைய செய்திகள்

recent
-

இதயநோயாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை- மருத்துவர் ஆலோசனை

இதயநோயாளிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என இதயசிகிச்சை நிபுணர் ஒருவர் இதயநோயாளிகளை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதயநோயாளிகளே அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதயசத்திரசிகிச்சை ஸ்டென்டிங் போன்றவற்றை செய்துகொண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவர் டிஸ்னா அமரதுங்க தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் இதயநோயாளிகள் தங்கள் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் கொவிட்டினால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் வழமையான உடற்பயிற்சிகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதயநோயாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை- மருத்துவர் ஆலோசனை Reviewed by Author on September 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.