அண்மைய செய்திகள்

recent
-

குழந்தை பிரசவித்த தாய் மரணம் - யாழில் தொடரும் சோகம்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடையதாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். “செப்ரெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கோவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

குழந்தை பிரசவித்த தாய் மரணம் - யாழில் தொடரும் சோகம் Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.