அண்மைய செய்திகள்

recent
-

மின் கட்டணங்களைச் செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

மின்சாரப் பாவனையாளர்கள் மின் கட்டணங்களைச் செலுத்தாததால் இலங்கை மின்சார சபை பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். நுகர்வோர் தமது கட்டணங்களைச் செலுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார். 

 “மேலும் ஒரு மாதம் வழங்கினால் நாங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வோம். மின் கட்டணம் மட்டும் 44 பில்லியன் ரூபா நிலுவை உள்ளது. தற்போது நாம் அவர்களுக்கு வட்டி சேர்க்கவில்லை. 12 வீத சலுகைக் கட்டணம் வழங்கி ஊக்குவிக்கிறோம். எனவே நாம் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துமாறு கோருகிறோம்” என்றார்.

மின் கட்டணங்களைச் செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை Reviewed by Author on September 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.