காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் தொடக்கம் ஏ35 வீதி வட்டுவாகல் வரையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முல்லைத்தீவு அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு நகர்பகுதி, ஊடாக மந்துவில், ஆனந்தரபும், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வரையான மின்சார இணைப்பில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது
.
.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை
Reviewed by Author
on
September 26, 2021
Rating:
No comments:
Post a Comment