அண்மைய செய்திகள்

recent
-

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை

இன்று (26) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மின்தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை தேராவில் முதல் வட்டுவாகல் பாலம் வரையில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது. 

 புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் தொடக்கம் ஏ35 வீதி வட்டுவாகல் வரையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முல்லைத்தீவு அலுவலகம் அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு நகர்பகுதி, ஊடாக மந்துவில், ஆனந்தரபும், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வரையான மின்சார இணைப்பில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது

.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை Reviewed by Author on September 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.