அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வீதிகளில் வலைகளை உலர வைப்பவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

மன்னார் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் மீனவர்கள் சிலர் வலைகளை உலர விடுவதனால் விபத்துக்கள் மற்றும் சூழல் பாதிப்புகள் ஏற்படுத்துவதை தொடர்ந்து விரைவில் வீதிகளில் வலைகளை உலர விடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் உலர விடப்பட்ட வலைகளையும் கையகப்படுத்தும் நடவடிக்கை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளது 

 மன்னார் நகர பகுதிகளை சூழவுள்ள சில கிராமங்களில் மீன்பிடி நடவடிக்கைகளின் பின்னர் அழுக்கு நிறைந்த வலைகளை மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உலர வைப்பதினால் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்களால் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மேற்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது 

 கடந்த காலங்களில் மன்னார் பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவினரால் பல முறை ஒலிபெருக்கிகள் மூலம் குறித்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சில மீனவர்கள் அசட்டையீனமாக தொடர்சியாக வலைகளை வீதிகளில் உலர விடும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உங்கள் கிராமங்களில் வீதிகளில் வலைகள் உலர விடப்பட்டால் உடனடியாக மன்னார் பொலிஸ்நிலைய சுற்று சூழல் பிரிவுக்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 





மன்னாரில் வீதிகளில் வலைகளை உலர வைப்பவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை Reviewed by Author on September 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.