தலைமன்னாரில் சுமார் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
தலைமன்னார் பொலிஸாருக்கு கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் பொலிஸார் விரைந்து சென்று குறித்த 'ஐஸ்' போதைப் பொருட்களை மீட்டதுடன்,குறித்த சந்தேக நபர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெறுமதி 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
-கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தற்போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னாரில் சுமார் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
Reviewed by Author
on
September 15, 2021
Rating:
No comments:
Post a Comment