அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பகுதியில் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை திறந்து வைப்பு

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியில் உள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் அத்தியாவசிய உணவு தேவையை அடிப்படையாக கொண்டு உணவு பொருட்களை இலகுவாக பெற்று கொள்ளும் முகமாக பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை இன்று வியாழக்கிழமை மதியம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது 

 மன்னார் பிரதேச செயலக பிரிவில் நீண்ட நாட்களாக செயற்பாடுகள் இன்றி காணப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீள் உருவாக்கும் முகமாகவும் மக்கள் இலகுவாக கொரொனா காலப்பகுதியில் கட்டுப்பாட்டு விலைக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளுவதற்கு உதவியாகவும் இன்றையதினம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மற்றும் கூட்டுறவு சங்க உதவி ஆணையாளர் பரின் கஹான அப்துல் சமீயூ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது









தலைமன்னார் பகுதியில் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை திறந்து வைப்பு Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.