அண்மைய செய்திகள்

recent
-

ரூ.3 கோடி பெறுமதியான முத்துக்களை விற்க முயன்றோர் கைது

புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் 4 முத்துகளை விற்க முயன்ற மூவர் நேற்று(08) வவுனியாப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

 சந்தேக நபர்கள் அக்குறணை, மஹவ, நிக்கவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. வவுனியாவிலுள்ள உணவகம் ஒன்றின் கார் தரிப்பிடத்தில் சந்தேக நபர்கள் ரூ.30 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 04 முத்துக்களை விற்க முயன்றதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித் துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ரூ.3 கோடி பெறுமதியான முத்துக்களை விற்க முயன்றோர் கைது Reviewed by Author on October 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.