அண்மைய செய்திகள்

recent
-

சிறந்த வீரருக்கான விருதை சர்வதேச ரீதியில் பெற்று கொண்ட மன்னார் கால்பந்தாட்ட வீரர்

நேற்றையதினம் மாலை 4 மணியளவில் இடம் பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்று போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய நிலையில் போட்டி சம நிலையில் முடிவடைந்தது குறித்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் சிறந்த வீருக்கான விருதை பெற்று கொண்டார் நேற்றைய தினம் இடம் பெற்ற குறித்த போட்டியில் சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் 101 இடத்தில் இருக்கும் இந்திய அணியும் கால்பந்தாட்ட தரவரிசையில் 205 வது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கும் போட்டி இடம் பெற்ற போட்டியில் இரு அணிகளும் எந்த கோல்களும் பெறாத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது

 இருப்பினும் குறித்த போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் ஆட்ட நாயகனுக்கான விருதை தட்டி சென்றார் சர்வதேச போட்டி ஒன்றில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஒருவர் இலங்கையை பிரதி நிதித்துவபடுத்தி சிறந்த வீரருக்கான விருதை பெற்றமைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்






சிறந்த வீரருக்கான விருதை சர்வதேச ரீதியில் பெற்று கொண்ட மன்னார் கால்பந்தாட்ட வீரர் Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.