அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இது வரை தடுப்பூசி பெறாதவர்களுக்கு ' சினோபாம்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் இது வரை கொரோனா தடுப்பூசிகளை பெறாத நபர்கள் மற்றும் கடந்த மாதம் முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை(22) காலை தொடக்கம் மன்னார் எழுத்தூர் பாடசாலையில் இடம் பெற்று வருகின்றது. மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனை மற்றும் மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை , மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 அதன் அடிப்படையில் மன்னார் நகர் பகுதியில் இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இன்றைய தினம் சினோபாம் தடுப்பூசியின் முதல் ஊசியை பெற்று வருகின்றனர். அதே நேரம் கடந்த மாதம் சினோபாம் தடுப்பூசியில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசியை தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். இது வரை மன்னார் மாவட்டத்தில் 83 வீதமானவர்கள் கொரோனா தடுப்பூசிகளில் இரண்டு ஊசிகளையும், 68 வீதமானவர்கள் முதல் முதலாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் இது வரை தடுப்பூசி பெறாதவர்களுக்கு ' சினோபாம்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by Author on October 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.