அண்மைய செய்திகள்

recent
-

மாவட்ட விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்சித்திட்டம் மன்னாரில் ஆரம்பிப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மட்டத்திலிருந்தும் இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திறமையான வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் நிகழ்வு மன்/ புனித சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பளர் M.L.M.N.நைருஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

 குறித்த நிகழ்வில் இளைஞர் சேவை மன்றத்தின் நிர்வாக மற்றும் நிதிப் பணிப்பாளர் W.மனுல சமல் பெரேரா, இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் A. அமீர், தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.பூலோகராஜா இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழக வீரர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர் குறித்த நிகழ்வுல் தெரிவு செய்யப்படும் இளைஞர்கள் தேசிய ரீதியில் இடம் பெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன் அவர்களுக்கு என தேசிய ரீதியான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
                












மாவட்ட விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்சித்திட்டம் மன்னாரில் ஆரம்பிப்பு Reviewed by Author on October 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.