24 நாட்களேயான சிசு உட்பட வடக்கில் ஐவர் கொரோனாவால் பலி
24 நாட்களேயான பச்சிளம் சிசு உட்பட யாழ்ப்பாணத்தில் மூவருடன் வடக்கு மாகாணத் தில் 5 பேர் கொரோனா தொற் றால் நேற்று உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம், 24 நாட்களேயான சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த சிசு ஒன்று தொற்றால் உயிரிழந்தது
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 42 வயது ஆணும், 63 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரி ழந்தனர்.
இவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் உயிரிழந்தனர்.
இதேபோன்று கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது பெண் ஒருவரும் நேற்று மரணமானார். வவுனியாவில் உயிரிழந்த 62 வயது ஆணுக்கும் பி. சி. ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது.
24 நாட்களேயான சிசு உட்பட வடக்கில் ஐவர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
October 02, 2021
Rating:
No comments:
Post a Comment