அண்மைய செய்திகள்

recent
-

செட்டிகுளத்தில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது, மதவாச்சி - மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் மரணமடைந்தார். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

செட்டிகுளத்தில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி Reviewed by Author on October 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.