முல்லைத்தீவு கடற்கரையில் தடைகளை தகர்த்து மாவீரர்களுக்கு அஞ்சலி
இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது
ஏற்கனவே முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டபோதும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்
முல்லைத்தீவு கடற்கரையில் பொதுச்சுடரினை பீற்றர் இளஞ்செழியன் கிந்துஜா ஏற்றிவைத்தார் அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கடற்கரையில் தடைகளை தகர்த்து மாவீரர்களுக்கு அஞ்சலி
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment