அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கடற்கரையில் தடைகளை தகர்த்து மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழீல விடுதலைப் போராட்டத்திற்கு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு கடற்கரையிலே சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாலருமான பீற்றர் இளஞ்செழியன் அவர்களும் அவரது மனைவி மற்றும் பலரும் சுடர் ஏற்றுவதாக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை பொலிசார் கைது செய்துள்ளனர் 

 இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது ஏற்கனவே முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டபோதும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

 முல்லைத்தீவு கடற்கரையில் பொதுச்சுடரினை பீற்றர் இளஞ்செழியன் கிந்துஜா ஏற்றிவைத்தார் அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது





முல்லைத்தீவு கடற்கரையில் தடைகளை தகர்த்து மாவீரர்களுக்கு அஞ்சலி Reviewed by Author on November 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.