அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் உழவியந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம்!

வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். இதன்போது வாடகைக்கு அமர்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

இதன்போது இரு சிறுவர்களில் ஒருவர் திடீர் என கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கிபடுகாயமடைந்துள்ளார். எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் சிறுவன் முன்னரேயே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் வயது 5 என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் உழவியந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம்! Reviewed by Author on November 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.