அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை காரணமாக 20 பேர் பலி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித் துள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் குறித்த மரணங்கள் சம்பவித்துள்ளன. குருணாகல் - உடுபெத்தாவ பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு காணாமல் போயிருந்த இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர, குருணாகல் - ரிதிகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தம்பதியினர் மரணித்தனர். நேற்றிரவு இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் கேகாலை - கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் இன்று அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீடொன்று மண்ணில் புதைந்ததோடு அதிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 20 பேர் பலி Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.