அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நிரம்பியிருந்த உணவகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தற்கொலை குண்டுதாரியை கட்டிடத்திற்குள் நுழைவதைத் தடுத்தபோதும் அவர் நுழைவாயிலில் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சுமார் 30 பேர் நிரம்பியிருந்த உணவகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஐவர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு போராளிக் குழுவே நேற்று இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நிரம்பியிருந்த உணவகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு Reviewed by Author on December 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.