அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு விபத்தில் தீக்காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றிப் பலி

மாத்தளை, உடுப்பிஹில்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு விபத்தினால் தீக்காயங்களுக்குள்ளான பெண் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாத்தளை உடுப்பிஹில்ல பகுதியைச் சேர்ந்த எச்.எம். சந்திரகுமாரி என்ற 69 வயது பெண்ணாவார். நவம்பர் 19 ஆம் திகதி எரிவாயு அடுப்பை பற்ற வைத்த போது உடலில் தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்த பெண் மாத்தளை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் இரண்டு வாரங்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரத்தத்தில் சீனி அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் வைத்தியசாலையில் மரணித்தார். 

 சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு நெருங்கிய ஒருவர் கூறுகையில், “அதிகாலை 5.30 மணியளவில் தேநீர் தயாரித்த போது விபத்து ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்” என்றார்

.
எரிவாயு விபத்தில் தீக்காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றிப் பலி Reviewed by Author on December 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.