எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்-ஜனாதிபதி
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியநாடுகளின் தாராள மனப்பான்மையை பாராட்டுவதாகவும் இந்த நாடுகள் நேரடியாகவோ அல்லது கொவக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை உலகின் ஏனைய பகுதியில் மிகவும் குறைந்தளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் உருவாகியுள்ளது என்றும் இதனை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த வைரசினை எதிர்கொள்வதற்கு போதுமானவையல்ல என்பதால், உலகம் மீண்டும் முன்னைய ஆபத்தான நிலைக்கு திரும்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்-ஜனாதிபதி
Reviewed by Author
on
December 05, 2021
Rating:
No comments:
Post a Comment