அண்மைய செய்திகள்

recent
-

தடுப்பூசி போடாத ஒமிக்ரோன் தொற்றிய பெண் நாட்டுக்குள் எப்படி நுழைந்தார்? - GMOA

ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தடுப்பூசி போடாமல் எப்படி நாட்டிற்குள் பிரவேசித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சங்கத்தின் நிறைவேற் றுப் பணிப்பாளர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே நாட்டுக்குள் நுழைய முடியும், ஆனால் நைஜீரியாவிலிருந்து ஒரு பெண் தடுப்பூசி போடாது நாட்டினுள் நுழைந்தது சிக்கலாக உள்ளது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் நுழைவதையும் பரவுவதையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

தடுப்பூசி போடாத ஒமிக்ரோன் தொற்றிய பெண் நாட்டுக்குள் எப்படி நுழைந்தார்? - GMOA Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.