அண்மைய செய்திகள்

recent
-

மூங்கிலாறு: சிறுமியை கொலை செய்து சூட்சுமமாக மறைத்த குடும்பத்தினர் மூவர் கைது

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சிறுமியை இவர்கள் கொலை செய்து அதனை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கொலை சம்பவத்தை வேறு வழியில் திசைதிருப்புவதற்காக சந்தேகநபர்கள் முயற்சித்துள்ள போதிலும், பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளூடாக கொலை தொடர்பான முழுமையான விடயங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 இதனிடையே, சிறுமியின் கொலை தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி, சிறுமியின் சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன சிறுமி, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மூங்கிலாறு: சிறுமியை கொலை செய்து சூட்சுமமாக மறைத்த குடும்பத்தினர் மூவர் கைது Reviewed by Author on December 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.