அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,461 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

 இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 566,936 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,326 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.