அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரம் பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை(04) இரவு 10 மணியளவில் கேஸ் அடுப்பு தீ பற்றி எரிந்ததுடன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையிலேயே திடீர் என அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்தியமையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் சம்ந்தப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர்

 அதே நேரம் தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ,ரெகுலேட்டர்களிலோ,வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்ததுடன் வெடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது
 




மன்னார் சாந்திபுரம் பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.