அண்மைய செய்திகள்

recent
-

மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடையே இன்று கலந்துரையாடல்!

நாட்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளன. செவ்வாய்கிழமை வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திடம் கோரவுள்ளதாக மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

 களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு 3,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் கிடைத்துள்ளது, இது செவ்வாய்கிழமை வரை தடையில்லா மின்சாரம் வழங்க உதவும். மின்சார சபைக்கு வருடாந்தம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளின் அளவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திற்கு அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுக்கு வரலாம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடையே இன்று கலந்துரையாடல்! Reviewed by Author on January 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.