அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு கைதான ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியல்

முல்லைத்தீவில் பெண்கள் பாடசாலை ஒன்றில் பதின்மவயது மாணவிகளுடன் பாடசாலை ஆய்வுகூடத்தில் வைத்து தொடர்ச்சியாக சில மாதங்களாக பாலியல் துஸ்பிரோகம் செய்து 24.12.2021 கைது செய்யப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் யாழ் மாவட்டம் பருத்தித்துறை தும்பளையை சேர்ந்த 26 வயதுடைய விஞ்ஞான பாடஆசிரியர் பெயர் ஜெயரத்தினம் அமல்ராஜ்.

முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 24.12.2021 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது கடந்த 04.01.2022 வரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.







முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு கைதான ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியல் Reviewed by Author on January 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.