அண்மைய செய்திகள்

recent
-

ஏஞ்சலினா ஜோலி போலாக ஆசைப்பட்டு கோரமாக மாறிய இளம்பெண்

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 50 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலியின் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிர ரசிகை ஒருவரே ஒவ்வொரு கட்டமாக 50 தடவைகள் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷாகர் தபார் (வயது 19) ஏஞ்சலினாவிற்காக எதையும் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். அந்த ஆர்வம் தான் அவரை ஏஞ்சலினா போல் மாற அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. 

 கடந்த சில மாதங்களாக 50 முறைகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டது மட்டுமின்றி, ஏஞ்சலினாவின் உடல் தோற்றம் போலாகக் கடும் உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார். இதனால் 40 கிலோவைக் குறைத்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஷாகர் தபார் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.இப்போது அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பின் தொடர்வோர் சிலர் அவரைப் பாராட்டியுள்ளனர். பலர் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏஞ்சலினா போலாக வேண்டும் என நினைத்து சோம்பை போலாகிவிட்டீர்கள் எனவும் கேலி செய்து வருகிறார்கள்.


ஏஞ்சலினா ஜோலி போலாக ஆசைப்பட்டு கோரமாக மாறிய இளம்பெண் Reviewed by Author on March 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.