நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்:- தொடர் மழை காரணமாக மீனவரை மீட்பதில் சிக்கல்
இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை மீன்வளத்துறை அதிகாரிகள், மெரைன் போலீஸ் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஆகியோரிடம் கடலில் மாயமான மீனவரை மீட்டு தர கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை முதல் தொடர் மழைக்கு மத்தியில் மீன் வளத்துறை, ராமேஸ்வரம் மெரைன் போலீஸ், மற்றும் மண்டபம் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகுகளின் உதவியுடன் தொடர்ந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை நடுக்கடலில் தேடி வருகின்றனர்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி விரைவில் மாயமான மீனவரை மீட்க வேண்டும் என மாயமான மீனவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்:- தொடர் மழை காரணமாக மீனவரை மீட்பதில் சிக்கல்
Reviewed by Author
on
April 10, 2022
Rating:
No comments:
Post a Comment