தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்
அப்போது தங்கச்சிமடம் பெட்டேல் நகரை சேர்ந்த பிரைட்வின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் மீன் பிடிக்க செல்வது போல் மீனவர் ஒருவர் கை பை ஒன்றை படகில் ஏற்றிக் கொண்டு இருந்தார்.
இதனை கண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் குறித்த பையில் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என அழைக்கப்படும் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து படகின் உரிமையாளர் பிரைட்வின் மற்றும் அக்காள் மடம் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த டெஸ்மன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
லிஸாரால் கைப்பற்றப்பட்ட 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற ஐஸ் போதைப்பொருள் உண்மையானதா? என்பது குறித்து ராமநாதபுரத்தில் உள்ள தடவியல் போலீசார் ரசாயனம் மூலம் பரிசோதனை செய்து கிறிஸ்டல் மெத்தம் பீட்டபமைன் என்று உறுதிபடுத்தினர்.
ராமேஸ்வரம் போலீசாரால் கைபற்றப்பட்ட 957 கிராம் ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடத்தல் போதைப்பொருள் பிடி பட்டதை அடுத்து கடலோர பகுதிகளிலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்
Reviewed by Author
on
April 10, 2022
Rating:
No comments:
Post a Comment