அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு 8 வது தடவையாக இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சர்வோதய மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது டயலெக்,ஹேமாஸ்,மாஸ் நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சர்வோதயாவின் ஏற்பாட்டில் மேற்படி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது 

 மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 300 குடும்பங்களுக்கு இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்களான அரிசி ,பருப்பு,சீனி,நெத்தலி,சோயா,தேயிலை, சமபோச உள்ளடங்களான அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு பொதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் டயலோக் நிறுவனத்தின் மன்னார் மாவட்ட முகாமையாளர் புத்திக ரண்டில் கலன் சூரிய, சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் சசிரேக்கா நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர். இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 500,000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது









மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு Reviewed by Author on May 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.