அண்மைய செய்திகள்

recent
-

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வு முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வு முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக ஆரம்பம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாக தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம்தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் உடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது

 இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பிரதேசத்திலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார் இதேவேளை இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது














தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வு முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக ஆரம்பம் Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.