அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொருட்கள் மாந்தை மேற்கு கிராம மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

இந்தியா தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக அடம்பன் மற்றும் நெடுங்கண்டல் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 116 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 நெடுங்கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் வைத்து முதல் கட்டமாக பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் போது உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். தொடர்ச்சியாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
      













தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொருட்கள் மாந்தை மேற்கு கிராம மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம். Reviewed by Author on May 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.