முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு
அந்த வகையிலே இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில்12.05.2022 அன்று ஆரம்பித்து வழங்கி வைக்கப்பட்டது
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கஞ்சி வழங்கும் திட்டமானது இன்று நான்காவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு
Reviewed by Author
on
May 15, 2022
Rating:
No comments:
Post a Comment