முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானம்
கிழக்கு மாகாணத்தில் 15 ஆம் திகதி ஆரம்பிக்கும் பேரணி பொத்துவிலில் ஆரம்பித்து திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக திருகோணமலை நோக்கி அங்கிருந்து முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலை சென்றடையும்.
வடக்கு மாகாணத்தில் 16 ஆம் திகதி ஆரம்பிக்கும் பேரணி வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து யாழ்ப்பாணம், தென்மராட்சி, பரந்தன், பூநகரி, வெள்ளாங்குளம், மாங்குளம் ஊடாக முள்ளிவாய்க்காலை அடையும். பிரதான வீதிகளில் நடந்தும் ஏனைய பகுதிகளில் வாகனங்கள் ஊடாகவும் இந்த பேரணி செல்லவுள்ளது.
அரசியல் தரப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள், மீனவ சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள் அனைவரையும் பங்கேற்க அழைக்கின்றோம் என்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானம்
Reviewed by Author
on
May 15, 2022
Rating:
No comments:
Post a Comment