மன்னாரில் இடம் பெற்ற திட்டமிடல் கருத்தமர்வு
இக்கருத்தமர்விற்கு வியாபார திட்டமிடல் ஆலோசகா ஜெயமலர் வளவாளராக கலந்து கொண்டார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு இலக்கு கிராமங்களிலிருந்து 52 கிராமிய மட்ட பெண் தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் குறிப்பாக சமகாலத்தில் எமது நாட்டில் புரையோடிப் போயுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் அனாவசியமான செலவீனங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பது தொடர்பாகவும், தமது கிராமிய வளத்தை பயன்படுத்தி குடும்பமாக இணைந்து பொருளாதார ரீதியில் திட்டமிட்டு தமது குடும்ப அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகளை உட்புகுத்தி இக் கருத்தமர்வு நடாத்தப்பட்டது.
இக்கருத்தமர்வு சம காலத்திற்கு பொருத்தப்பாடாக அமைந்துள்ளதுடன் இதில் பங்கேற்ற பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற திட்டமிடல் கருத்தமர்வு
Reviewed by Author
on
May 20, 2022
Rating:
No comments:
Post a Comment