மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவக நாள் தொழிலாளர்கள் உட்பட சிற்றூண்டி வியாபாரிகள் பாதிப்பு
அதே நேரம் மாலை நேரங்களில் சிற்றுண்டி வியாபாரங்களில் ஈடுபடும் பல வியாபாரிகள் எரிவாயு தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். சிற்றுண்டிகளை வீடுகளில் இருந்து விறகு அடுப்புக்களில் தயார் செய்ய வேண்டி வருவதாகவும் வீடுகளில் இருந்து தயார் செய்து விற்பனை செய்வதை மக்கள் கொள்வனவு செய்வது குறைந்துள்ளதாகவும் சிற்றுண்டி வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே விரைவில் அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் இவ்வாறான தொழிலாளர்களுக்கு எரிவாயுவை வழங்குமாறும் சிற்றுண்டி வியாபாரிகள் மற்றும் உணவக நாட்கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவக நாள் தொழிலாளர்கள் உட்பட சிற்றூண்டி வியாபாரிகள் பாதிப்பு
Reviewed by Author
on
May 20, 2022
Rating:
No comments:
Post a Comment