ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை!
இதன்போது, விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால எரிபொருள் விநியோக உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போதுள்ள எரிவாயு இருப்புக்களை முறையாக விநியோகிப்பது மற்றும் போதுமான எரிவாயு இருப்புக்களை விரைவாக கொள்வனவு செய்வது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை!
Reviewed by Author
on
June 17, 2022
Rating:
No comments:
Post a Comment