அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு.

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்து உள்ளனர். இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்

. இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு. Reviewed by Author on June 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.