அண்மைய செய்திகள்

recent
-

உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வந்தடைந்தது

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தது. இன்று (26) அதிகாலை 2.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மேற்படி குழுவினரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

 நாட்டில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் அவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வனைத்து சந்திப்புகளிலும், இலங்கையர்களுக்கு உதவுவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளை அவர்கள் ஆராய்வார்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கையர்கள் உழைக்கிறார்கள் மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு இலங்கையர்கள் திட்டமிடுகிறார்கள் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வந்தடைந்தது Reviewed by Author on June 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.