அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று சனிக்கிழமை (25) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இன்று(26) காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

 அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டித்தும் கிளிநொச்சியில் எரிபொருள் நிலையத்தில் கிளிநொச்சி வைத்திய அதிகாரியை தாக்கியதை கண்டித்தும் மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது









.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. Reviewed by Author on June 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.