வழக்கத்தை விட உள்வாங்கிய ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடல்:- மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை
இந்நிலையில்; மீன் பிடித்து வந்த மீன்பிடி படகுகள் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை மீனவர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர்.
எனவே தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழி வகை செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் கடந்த வாரம் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஆனால் தற்போது இன்று காலை முதல் தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வழக்கத்திற்கு மாறாக கடல் உள் வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நிற்கிறது.
வழக்கத்தை விட உள்வாங்கிய ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடல்:- மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை
Reviewed by Author
on
June 15, 2022
Rating:
No comments:
Post a Comment