அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெற்ற தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை(19) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈ .பி .ஆர் .எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ,மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர். குமரேஸ் தலைமையில் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றது. 

 குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், TELO பொறுப்பாளர் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் A யூட் குரூஸ் ஆகியோர் விசேடமாக கலந்துகொண்டு தியாகிகளின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் போது கட்சியின் தோழர்கள், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.









மன்னாரில் இடம்பெற்ற தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. Reviewed by Author on June 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.