அண்மைய செய்திகள்

recent
-

மேலும் நான்கு பரிதாப மரணங்கள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்ததால் அல்லது அது தொடர்பான சம்பவங்களில் இந்த வாரம் நான்கு பேர் பரிதாப மரணத்தை தழுவியுள்ளனர். அதன்படி எரிபொருள் வரிசையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.. யாழ் நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்துள்ளார்.

 தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பும் போது ட்ரக் வண்டி மோதியதில் மற்றுமொரு இளைஞர் உயிரிழந்துள்ளார். அங்குருவாதொட்ட பகுதியில் ஏழு நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 63 வயதான டிப்பர் சாரதி ஒருவரும் மரணித்துள்ளார் . ஹிங்குராங்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.வரிசையில் நின்று சோர்ந்து போன அவர்,அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளார். 


மேலும் நான்கு பரிதாப மரணங்கள் Reviewed by Author on June 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.