அண்மைய செய்திகள்

recent
-

50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒபேசேகரபுர – நாணயக்கார மாவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

 சந்தேக நபர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பொரளை கோதமி வீதியில் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது Reviewed by Author on July 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.