அண்மைய செய்திகள்

recent
-

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு!

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று அனுமதியற்ற மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சாரம் தாக்கியதில் குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்த யானையாது, சுமார் எட்டு அடி உயரமுள்ள 25 வயதுடைய யானை என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று வடமாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. அனுமதியின்றி மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு! Reviewed by Author on August 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.