மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு!
உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று வடமாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு!
Reviewed by Author
on
August 17, 2022
Rating:
No comments:
Post a Comment